வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜூலை-ஆகஸ்டு 2015)
1. 2014ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாக மத்தை மறுபடியும் ஒருமுறை வெற்றிகரமாக வாசித்து முடிக்க, தேவன் அருளிய கிருபைக்காக அவருக்கு கோடானகோடி துதிகளைச் செலுத்தி தங்களுக்கும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவாசிப்புப் பகுதிகளும், வேதவாசிப்புக் குறிப்புகளும் அவற்றிற்கான தியானக்குறிப்புகளும் எம் மனதின் போராட்டங்கள், அங்கலாய்ப்புகள், எதிர்பார்ப்புகளை அகற்றி, தைரியப்படுத்தி ஆசீர்வதிப் பதை ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. சத்தியவசன ஊழியங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்து மேன்மை பெற ஜெபிக்கிறேன்.
Mrs.Chandrabai Paul, Chennai.
2. We are regularly receiving your bimonthly Magazine and daily devotion books too. Thank you.
Mrs.Beulah Kasthuri, Sivakasi.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானபுத்தகம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது. வேதத்தை இன்னும் அதிகதிகமாக அறிந்துகொள்ள மிகவும் தாகமாய் இருக்கிறேன். தொடர்ந்து தங்கள் வெளியீடுகளை தவறாமல் அனுப்பவும்.
Mr.Arul Jeganathan, Thiruppathur.
4. தங்களது தொலைகாட்சி நிகழ்ச்சியை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் தமிழன் டிவியில் பார்த்து வருகிறேன். செய்திகள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. தங்களது நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் மிக அருமை. சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் பாடிய பாடல்கள், டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் பாடிய பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளன.
Mr.Dhanakumar, Tirunelveli.
5. அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. அந்த தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகள் எங்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துகிறார்கள். இந்த ஆத்தும ஆகாரத்தால் நாங்கள் தினமும் வழிநடத்தப்படுகிறோம். தேவன்தாமே உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!
Mrs.A.Leelabai, Madurai.
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எங்களோடு தினமும் பேசுவது மிகவும் ஆறுதலாகவும் விசுவாசத்தில் வளரவும் உதவுகிறது. எங்களுடன் சேர்ந்து பாடுகளுடன் பங்கெடுத்து உணர்ந்து எழுதும் செய்திகள் எங்களுக்காகவே எழுதுவதுபோல் உள்ளது. ஒரு பிச்சைக்காரன் மற்றொருவனுக்கு எங்கு ஆகாரம் கிடைக்கும் என்று சொல்லுவதுபோல் நாங்கள் சோர்ந்துபோகும் போதெல்லாம் ஜீவ வசனங்களினால் எங்களை தேற்றுகிறதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். தேவன் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்து இருக்கிறார்.
Mr.Richard Sam Alex, Chennai.