வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2015)
1. இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். சில ஆண்டுகளாக சத்தியவசன ஊழியப்பணியில் விசுவாசப்பங்காளராக கரம் கொடுத்து சிறிது பொருளாதார உதவியினால் தேவபணியில் பங்கெடுக்க ஆண்டவர் கொடுக்கிற கிருபைக்காக நன்றி. சத்தியவசன வெளியிடுகள் அதில் வெளியாகும் சத்தியங்களை குறித்து எழுத்தினால் பாராட்டுவதைவிட நடை முறையில் வாழ்ந்துகாட்டுவதே தேவனுக்கு மகிமையுள்ளதாயிருக்கும் என்பதால் அதன்படி வாழ பிரயாசப்படுகிறேன். ஒவ்வொரு ஆலோசனையும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையே தேவன் விரும்புகிறபடியால் இதற்கேற்றபடி வாழ எங்களுக்காக ஜெபியுங்கள்.
Mr.J.M.Chinnapparaj, Rajapalayam.
2. Dear Brother in Christ, Thank you for your prayers. My daughter Janice has got 1095 marks in +2 exam. Your Magazine, daily reading book, TV Programmes are very useful to us. We are praying for your Ministry.
Dr.Simpson Ravi, Palayamkottai.
3. தங்களது மாத இதழ் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. நான் அதிகம் விரும்பி படிக்கும் பத்திரிக்கை. மேலும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உறுதுணையாக உள்ளது. எனக்கும் தொடர்ந்து பத்திரிக்கையை அனுப்பித் தரக் கேட்கிறேன்.
Mrs.Ramani Balram, Ooty.
4. வணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. உங்கள் பத்திரிக்கைகளும், காலண்டர் மற்றும் அவ்வப்போது பங்காளர்களுக்கு அனுப்பும் புத்தகங்களும் எங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. ஊழி யங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
Mr&Mrs.Vasan, Agastheeswaram.
5. கிறிஸ்துவுக்குள் அன்புள்ள ஐயா, அனுதினமும் கிறிஸ்துவோடு தொடர் நடைபோட ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ எனக்குத் துணை செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நான் நடக்க வேண்டிய வழி, செயலாற்ற வேண்டிய திட்டங்களை எனக்குத் தந்து அவைகளை நிறைவேற்ற உதவிசெய்கிறது. அதற்காக நான் என் தேவனுக்கும் செய்திகளை அனுப்பித்தரும் உங்களுக்கும் நன்றி கூறுகிறேன். பாடுகள் நிறைந்த என் வாழ்வில் சரீரத்தின் உடல் வேதனைகளையும் மறந்து ஆவிக்குரிய நன்மைகளை ருசித்து சுவைத்து இன்பம் காண தியானபுத்தகம் எனக்கு துணை செய்கிறது.
Mrs.Navamalar Johnson, Tirunelveli.
6. சத்தியவசனம் சஞ்சிகை மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மிகவும் பயனுள்ளவை. தினசரி தின தியானங்கள் மிகவும் ஆழமான வேதவசனங்களாக உள்ளதால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகுந்த பயனுடையதாக உள்ளன. கர்த்தர்தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக!
Mrs.Glory Sam, Trichy.