வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2016)

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் மாதப் பிறப்பிற்கு முன்னதாகவே கையில் கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார். ஒவ்வொரு நாளும் என் உலகப்பிரகாரமான கடமைகளைச் செய்யவும், ஆண்டவரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளவும் அனுதினமும் கிறிஸ்துவுடன் நாளின் நற்சிந்தனை உற்காமூட்டும் டானிக் போல் உள்ளது. அநேக நாட்கள் என் மனதில் தோன்றும் எத்தனையோ ஐயங்களுக்கு ஒரு விடையாக அமைந்து திருப்தியடையச் செய்யும். சத்தியவசன ஊழியங்கள் தடையின்றி நடக்க பாரப்பட்டு ஜெபிக்கிறேன்.

Mrs.Rajakumari, Madurai.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. ஒவ்வொருநாள் தியானமும், கருத்துகளும் மிக அருமையாக உள்ளது. நாங்கள் உபயோகித்தபின்பு முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் வாசித்து பயன்பெற்று வருகின்றனர்.

Mrs.Sugirtha Edwin, Trichy.

3. கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதரருக்கு, இந்தநாள் வரையிலும் தாங்கள் அனுப்பித் தருகிற சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் மற்றும் சிறப்பு வெளியீடுகள் அனைத்தையும் படித்து பயன் பெறுகிறோம். மாத்திரமல்ல, SMS வேத வசனங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Mrs.Nalini Prabakar, Vellore.

4. கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா, நான் தங்களது சத்தியவசன நிகழ்ச்சியினை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மிகவும் பிரயோஜனமாக உள்ளது. சகோ.பிரகாஷ் ஏசுவடியான், Dr.தியோடர் வில்லியம்ஸ், Dr.புஷ்பராஜ் ஆகியோர் அளிக்கும் செய்தி அருமையாக உள்ளது. வேதத்தின்படி வேதத்தை தெரிந்துகொள்ள உதவுகிறது.

Mr.Dhana Kumar, Pavoorchathram.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் மாதந்தோறும் சிறப்பான தியானங்கள் உள்ளன. ஆசீர்வாதமாக உள்ளன. வாசிக்க வாசிக்க தேனிலும் இனிமையாக உள்ளன. ஊழியர்களுக்கு என் அன்பான தோத்திரம்.தவறாமல் கிடைத்து வருகிறது.

Mr.P.John Solomon, Bangalore.

6. Greetings in Jesus Precious Name. We Praise God for your Ministry and for the Word of God which goes forth powerfully. May everyone we blessed.

Mr.Cecil Coilpillai, Chennai.

7. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை வாசிப்பது தினந்தோறும் வேதத்தை வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் ஆசீர்வாதமாக உள்ளது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கர்த்தருக்கு பிரியமானவர்களாய் வாழ எங்களுக்காக ஜெபிக்கவும்.

Mrs.Indra, Tirunelveli.

8. தங்களது பத்திரிக்கைகள் கிடைத்தது. செய்திகள் மனதிற்கு ஆறுதலாகவும், ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவையாகவும் உள்ளது. தங்களது ஊழியம் நல்ல முறையில் நடைபெறவும் ஜெபிக்கிறோம்.

Mr.Sam Gunalan, Erode.