வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜூலை-ஆகஸ்டு 2016)
1. Greetings to you in the name of our Lord Jesus Christ. Your daily readings ‘Anuthinamum Christuvudan’ and the other books are quite useful in my day to day life. May God bless all those who work in this sathiavasanam Ministry abundantly. Surely His blessings would help you all to be a blessing to others.
Mrs.Padmini Victor, Madurai.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிப்பதன் மூலம் எவ்வளவோ ஆறுதலையும் சமாதானத்தையும் அடைந்து வருகிறேன். என் பெலவீனத்தின் மத்தியில் வேதத்தை வாசிக்க தேவன் தந்த வாஞ்சைக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். கடந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரையும் கண்ணின்மணிபோல் பாதுகாத்து இம்மட்டும் நடத்திவந்த தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிக்கிறேன்.
Mrs.Victoria Isaac, Tirunelveli.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வேதவாசிப்பு பகுதியின்படி கடந்த 1 வருடத்தில் வேத புத்தகத்தை வாசித்து முடித்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடமும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Mrs.Sargunar, Madurai.
4. 2015 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபை செய்தார். எத்தனையோ ஆண்டுகள் இப்படி வேதாகமத்தை வாசித்து முடிக்க தியானபுத்தகத்தின் அட்டவணை எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. தியானங்கள் என் வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. இந்த ஊழியங்களை ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
Mrs.Regina Manickam, Palayamkottai.