வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2016)
1. நான் தினமும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூலை தவறாமல் வாசித்து தியானித்து கர்த்தருக்குள் புதுப்பெலன் அடைந்து வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேதவாசிப்பு அட்டவணைப்படி ஒவ்வொருவருடமும் வேதாகமத்தை வாசித்து முடித்து வருகிறேன் என்பதையும் மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறேன்.
Dr.F.S.Jesudasan Peters, Madurai.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் தினசரி சிறப்பான தியானங்களை மிக நேர்த்தியாக தயாரித்து வழங்கிவரும் ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம். தியானபுத்தகத்தில் பிரசுரமாகும் வேதவாசிப்பு அட்டவணைப்படி கடந்த ஆண்டிலும் வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க அருள்நாதர் உதவி செய்தார் என்பதை மனம் நிறைந்த சந்தோஷத்தோடு, தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்துத் தெரிவிக்கிறேன். சத்தியவசன ஊழியங்கள் மேன்மேலும் வளர்ந்தோங்க சிறப்படைய ஆண்டவர் அருள்புரிய ஜெபிக்கிறேன்.
Mrs.Chandrabai paul, Chennai.
3. I admire and appreciate your soul winning Ministry. When I meditate on your Message contained in the bimonthly devotional Anuthinamum Christhuvudan in the early morning with the help of the Holy Bible. My spirit is filled with delight and enthusiasm.
Mr.Vincent, Srivilliputhur.
4. The book Anuthinamum Christhuvudan reached my hand unexpectedly by God’s Grace. I am reading the messages everyday in my prayer-time. It is very useful for me and my spiritual life. God bless you.
Mr. Pitchamani, Tuticorin.
5. சத்தியவசன ஊழியர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். தங்களது ஒளிபரப்பை தவறாமல் கேட்டு பயன்பெற்று பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் உள்ளது. அதற்காக தேவனைத் துதிக்கிறேன்.
Mr.M.K.Paul vasantharaj, Vellore.
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை படித்து வருகிறேன். அந்தந்த மாதத்தின் வேதபகுதிகளை அந்தநாட்களில் வாசித்து முடித்துவருகிற விபரத்தையும் உங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறேன்.
Mr.A.John Raj, Pallapallam.
7. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாகவும், எழுப்புதலாகவும் இருக்கிறது. பல சூழ்நிலைகளின் மத்தியிலும் விழிப்படையச் செய்கிறதாய் இருக்கிறது. விசுவாசப் பாதையில் நாங்கள் நிலைநிற்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Mrs.M.Samuel, Nellikuppam.