வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி – பிப்ரவரி 2019)
[1]
சத்தியவசன பத்திரிக்கைகள் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தி நம் ஆண்டவர்மேல் இன்னமும் அன்பு, நம்பிக்கை, விசுவாசம் வைக்க ஏதுவாகி நம் விசுவாச ஓட்டத்தை பொறுமையோடு ஓட கற்றுக் கொடுக்கிறது. தேவன்தாமே அபரிமிதமாக ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.
Mrs.Emy Mohandoss, Chennai.
[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் கடந்த அக்டோபர் மாதத்தின் ஜெபத்தில் நிச்சயமாய் ஒருநாள் நிகழ இருக்கிற மரண வேளையை தைரியமாய் சந்திப்பதற்கு இன்று நான் வாழும்போதே அதற்கு ஆயத்தமாகவும் சாட்சியோடும் வாழ கிருபை தாரும் என்ற ஜெபம் ஆறுதலாக இருந்தது. வயோதிப காலத்திலும் தேவன் என்னோடு இருந்து குடும்பத்தை அற்புதமாய் நடத்துகிறார்.
Mr.G.Mohnaraj, K.K.Dt
[3]
Dear Brother, I am one of the Faith partner of your Ministry. The Message given in the Nambikkai Tv on Sundays are useful to me.
Mrs.N.Leela Nesabai, Neyyoor.
[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்து ஆவிக்குரிய சத்தியங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறோம். கர்த்தர் தம் ஐசுவரியத்தின்படி எல்லாத் தேவைகளையும் சந்திப்பார். இந்த மகத்துவமான ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.
Mrs.Kamala Jeyaseelan, Tirunelveli.
[5]
இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் வாயிலாகவே பரிசுத்த வேதாகமத்தை கிரமமாக, முறைப்படி படிக்க அறிந்துகொண்டேன். கிரமமாக படிக்கும்போதே ஆண்டவர் நம்மோடு பேசுவதை, தொடுவதை உலகத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிப்பதை உணர முடிகிறது. ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டிய வேதபகுதிகள் மூலமாக ஆண்டவர் பேசுவதை உணர்கிறேன். அந்தந்த வேத பகுதிகளோடு உலகில் நடைபெறும் காரியங்களை ஒப்பிட்டால் நம் மூலம் அவர் செய்ய வேண்டுவதை, நம்மை நடத்துவதை காண முடிகிறது. ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.
Mr.Xavier, Chennai.