வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச் – ஏப்ரல் 2019)

[1]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கை தவறாமல் கிடைக்கிறது. தியானங்கள் ஆசீர் வாதமாகவும் பத்திரிக்கை மிகவும் பிரயோஜனமாகவும் உள்ளது.

Mrs.Gunaselvi Malliga, Udumalpet.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ் எனக்கு வழிகாட்டியாகவும் ஆற்றி தேற்றுவதாக உள்ளது. நல்ல ஆலோசனைகளை ஏற்ற வேளையில் அதன்மூலம் பெறவும் ஆழமாக அறிந்து கொள்ளவும் உதவுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Rajasuganthi Issac, Chennai.


[3]
நான் புறமதத்திலிருந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழன் டிவியில் தற்செயலாக சத்தியவசன நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. கொடுக்கப்பட்ட செய்திகளும் வசனங்களும் தெளிவாகவும் நன்றாக மனதில் பதியும்படியாகவும் எடுத்துரைத்தது அதிக பயனுள்ளதாக இருந்தது. செய்திகுறிப்புகளை எடுத்துக்கொண்டேன். தொடர்ந்து உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Esther Panditha Ramabai, Chennai.


[4]
நான் சத்தியவசன ஊழியத்தின் பங்காளராக இருப்பது கர்த்தர் கொடுத்த பாக்கியம். அனுதினமும் கிறிஸ்துவுடன் பிரதியில் வேதத்தை ஓராண்டுக்குள் படித்து முடிக்கும் திட்டம் அருமையானது. 2018ஆம் ஆண்டு வேதத்தை வாசித்து முடிக்க கிருபை செய்த இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி பலி செலுத்துகிறேன். தியானங்கள் விசுவாசிகளுக்கு அனுதின மன்னாவைக் கொடுக்கிறது. கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்க பெலன் கொடுத்து வருகிறது. கர்த்தர்தாமே இந்த ஊழியங்களை ஆசீர்வதித்து அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட கிருபை செய்வாராக.

Mrs.Packiavathy Paulraj, Chennai.


[5]
Dear Brother, I am getting Anuthinamum Christhuvudan, Sathiya vasanam Sanchigai and they are of great inspiration to me. May God continue to bless your Ministry in different ways.

Mrs.Nalini Stephenson, Vellore.


[6]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. இரண்டு புத்தகங்களும் மிகுந்த பயனுள்ளதாய் உள்ளது.

Mr.G.Prabin, Reetapuram