வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே – ஜுன் 2019)

[1]
2018 ஆம் வருடத்திலும் வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு முறை வாசித்து முடிக்க தேவன் கிருபை செய்தார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் வாசித்து பயனடையவும், கிறிஸ்துவுக்குள் பெலனடையவும் உதவி செய்தார். சத்தியவசன சஞ்சிகையையும் கிடைக்கிறது. அதிலுள்ள செய்திகளை வாசித்து ஆவிக்குரிய நன்மைகளை பெற்று வருகிறோம். எனது பேத்தி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறாள். அவளுக்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். கர்த்தருடைய கிருபையால் எந்த சுகவீனமும் இன்றி எல்லாத் தேர்வுகளையும் நன்றாக எழுத கர்த்தர் கிருபை செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

Mrs.Leela Packianathan, Tuticorin.


[2]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசன சஞ்சிகை யாவும் எங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Mrs.Christober Abraham, Turticorin.


[3]
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து நான் எழுதுகிறேன். இங்கே சனிக்கிழமை உபவாச கூடுகை, ஞாயிறு ஆராதனை நடைபெறுகிறது. தினந்தோறும் நடைபெறும் காலை தியான வேளையில் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபகுதியே வாசிக்கப்படுகிறது. உண்மையாகவே அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியானவர் எங்களோடு பேசுவதுபோலவே இருக்கும். அதின் மூலம் சிலர் இரட்சிக்கப்படவும், சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும், சிலருக்கு பாவத்தை கண்டித்து உணர்த்துவது போலவுமிருக்கும். நாங்களும் தினந்தோறும் தங்கள் ஊழியங்களுக்காக எழுத்துப்பணிக்காக தவறாமல் ஜெபிக்கிறோம்.

அன்பு சகோதரர், Palayamkottai.


[4]
2018 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கால அட்டவணையின்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபை செய்தார். அந்தவருட ஆகஸ்டு மாதத்தில் 28 ஆம் தேதி அன்று எழுதப்பட்ட தலைப்பு ‘உடைக்கப்பட ஆயத்தமா?’ இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துகள் உடைந்த உள்ளத்தோடு வாழும் அநேகருக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கும். எனக்கு இப்பகுதி அதிக ஆறுதலைக் கொடுத்தது. இத்தின தியானங்கள் அநேகருக்கு இவ்விதமான ஆறுதலைக் கொடுக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Gnanamani Epxipah, Vellelanvilai.


[5]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. தியானபுத்தகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வருடமும் வேதாகமத்தை வாசிக்க துவங்கி தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

Mr.Y.Rajan, Neyveli.