வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2021)
[01]
மார்ச் -ஏப்ரல் 2020 மாத சத்தியவசன சஞ்சிகையை 3 முறை படித்தேன். ஒவ்வொரு தலைப்பிலான செய்திகளையும் படித்து ஆறுதலடைந்தேன். சகோதரி சந்திரா அருமைராஜ் அவர்கள் எழுதியிருந்த மீட்பர் இயேசு உயிர்த்தார் என்ற கவிதை மிகவும் அருமை. தங்களை தேவன் இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த வேண்டுகிறேன்.
Mrs.Sundariammal, Madurai.
[02]
Dear Brother in Christ, I need your Monthly Daily reading book and Sathiya vasanam Magazine. Daily reading devotions are super and very useful.
Mrs.Daisy Jeyapandiaraj, Vellore.
[03]
தங்களது பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. வாசித்தேன். சத்தியவசன பத்திரிக்கை உண்மையிலேயே ஜீவனுள்ள தேவனண்டைக்கு என்னை வழி நடத்துகிறது.
Mrs.Mary Jebaraj, Madurai.
[04]
அன்புள்ள சத்தியவசன குடும்பத்துக்கு, என் அன்பின் வாழ்த்துக்கள். இவ்வாண்டில் கடினமான பேரழிவின் மத்தியிலும் நம்மை காத்து வழிநடத்தும் தேவனுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. முதிர்வயதிலும் தாங்குவேன், சுமப்பேன் என்று வாக்குத் தந்த தேவன் என் வாழ்விலும் அப்படியே செய்துவருகிறார். நவம்பர் மாதம் 82 வயதை காண தேவன் கிருபை செய்தார். 91 ஆம் சங்கீதத்தில் சொல்லப்பட்ட வாக்குகள் யாவையும் நான் அனுபவித்து வருகிறேன். கர்த்தருக்கே மகிமை!
Mr.Richard Sam Alex, Chennai.
[05]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. சத்தியவசன ஊழியங்களுக்காக, அனைத்து ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். பத்திரிக்கைகள் ஆசீர்வாதமாக உள்ளன. வாசித்து பயன்பெறுகிறேன். கர்த்தர் ஊழியங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
Sis.Gunaselvi Malliga, Udumalpet.
[06]
தங்களின் இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற ஏடு மறைக் கல்வி நடத்தவும், பெண்கள் பணிக்குழு, குறிப்பாக அன்பின் ஐக்கியக் கூடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சத்தியவசனம் என்ற ஏடு வாலிப இயக்கம், பேரவை மூப்பர்கள் மற்றும் இருபால் பெரியவர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிய தூண்டுதலாக இருக்கிறது.
Mr.S.Thangaraj, Chennai.
[07]
தாங்கள் எனக்கு அனுப்பிய நவம்பர் – டிசம்பர் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை கூடுமானால் மற்றொரு பிரதி அனுப்ப வேண்டுகிறேன். அதில் வெளியிடும் செய்திகள் நன்றாக மிகவும் பிரயோஜனமாக இருப்பதால் என் மகளுக்கு அனுப்பிவிட்டேன். கர்த்தர் ஊழியத்தை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
Mr.A.David Jeyachandran, Madurai.