வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2021)

[01]
அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் கடிதங்களும் பத்திரிக்கைகளும் தவறாமல் கிடைக்கப்பெறுகிறோம். ஆண்டவரின் பெரிதான கிருபையால் 2020ஆம் ஆண்டின் வேதவாசிப்பின் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார்.

Mrs.Menaka George, Coimbatore.


[02]
நமது ஆண்டவரின் இரக்கம் நிறைந்த பராமரிப்போடு கடந்த 82 ஆண்டுகள் கர்த்தர் கரம்பிடித்து நடத்தி 2021க்குள் என்னை பிரவேசிக்கச் செய்துள்ளார் என்பதை கோடானகோடித் துதிகளோடு சாட்சி கூறி சமர்ப்பிக்கிறேன். கடந்த 50 ஆண்டுகட்கு முன்பிருந்தே இலங்கை வானொலியில் சத்திய வசன நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டு மகிழ்ந்துள்ள நான் இன்று வரை தொடர்ந்து பங்காளராகவும் இருந்து வருகிறேன். 2020ஆம் ஆண்டிலும் மறுபடியும் ஒருமுறை தியான புத்தகத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தைக் கிரமமாக வாசித்து முடிக்க அருள் செய்த ஆண்டவரைத் துதிக்கிறேன். நெருக்கடி நிறைந்த இக்கடைசி நாட்களில் சத்தியவசன ஊழியங்கள், ஊழியர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Coimbatore.


[03]
I thank Lord for your ministry through media and Bi-monthly maga zine and Anuthinamum Christhuvudan and they are very useful for our daily devotion. Thank you again and God bless your Lord’s ministry.

Dr.Deivamony Selvam, Trichy


[04]
இம்மட்டும் வழிநடத்தி பாதுகாத்து ஜீவன் தந்த கர்த்தருக்கே ஸ்தோத்திரம். முதிர்வயதிலும் உன்னைத் தாங்குவேன், தப்புவிப்பேன் என்று சொன்ன தேவன் எனது 82வது வயதைக் காணச்செய்தார். அவருக்கே கோடான கோடி நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தினமும் வாசித்து தியானிப்பதின் மூலம் என் வாழ்வில் சமாதானம், ஆறுதல், மாற்றங்கள் உண்டாகச்செய்து ஆண்டவரை அதிகம் தேட, ஜெபிக்க துதிக்கச் செய்தார். வேதாகம வாசிப்பு அட்டவணைப் படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க கிருபை செய்தார். அவருக்கே நன்றி. ஒவ்வொரு மாதமும் தியானங்களை எழுதிவருகிற சகோதர, சகோதரிகளுக்காகவும், ஊழியத்தின் எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mrs.Darlingam Gunaranjitham, Ramnad.


[05]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2020ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடிக்க கிருபை செய்தற்காக ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

Mr.P.Gurunath Rajasekeran, Chennai.