வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச்-ஏப்ரல் 2022)
[01]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என்னுடைய வயது 73, கடந்த ஜுன் மாதம் வந்த கொரோனாவிலிருந்து தேவன் நல்லசுகம் தந்தார். தேவனுக்கு மகிமை, தங்கள் தியானபுத்தகம் அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆத்துமாவுக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. சத்தியவசன ஊழியத்திற்காகவும், தியானத்தை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம்.
Mrs.Gunaselvi Malliga, Nagercoil
[02]
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, நீங்கள் அனுப்பிய காலண்டர், அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் அனுப்பும் ஜெபகுறிப்புகளை வைத்து குடும்பமாக ஜெபிக்கிறோம். சத்திய வசன டிவி நிகழ்ச்சிகளை பார்த்து பயனடைகிறோம். தியான புத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி 2021 ஆண்டு நானும் எனது கணவரும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்துவிட்டோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Mrs.Beulah James, Chennai
[03]
அன்பு சகோதரருக்கு, புதுச்சேரியிலிருந்து எழுதுகிறேன். 2021 ஆம் ஆண்டு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடித்துள்ளேன். இதுவே எனக்கு வேதாகமத்தை முழுவதுமாக வாசிப்பது முதல்முறை. இந்த வருடமும் அட்டவணைப்படி நானும் எனது தாயாரும் வாசித்து வருகிறோம். தியானங்களை அனு தினமும் வாசித்து பயன் அடைகிறோம். மிக்க நன்றி.
Mr.Sunil JacobRaj, Puducherry
[04]
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா, 2021 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை ஒரு முறை வாசித்துமுடிக்க தேவன் கிருபை செய்தார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் வேதாகமத்தில் இடம்பெற்ற அநேக பெண்கள் பற்றி எழுதப்பட்ட செய்திகள் அதிக பிரயோஜனமாக இருந்தது. மேலும் சத்தியவசனத்தில் முதுமையிலும் இனிமை கண்ட அன்னாள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்திகள் அதிக பயனுள்ளது. தொடர்ந்து சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.
Mrs.JP.Gnanamani Hepzibah, Vellalanvilai.