வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2022)
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு நான் சில வாரங்களாக தொலைகாட்சியில் உங்களது சத்திய வசனம் செய்தியை கேட்டுவருகிறேன். மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது, நெகேமியா புஸ்தகத்திலிருந்து தேவவசனங்களை கேட்கிறோம். நன்றி.
Mr.P.Thiraviam,Tr. Tirunelveli.
அன்பார்ந்த சகோதரருக்கு, சென்றமாதத்தில் எனக்கும் எனது மனைவிக்கும் உள்ள பெலவீனங்கள் நீங்க ஜெபத்திற்காக கடிதம் எழுதியிருந்தேன். கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டார். ஆண்டவர் நல்ல சுகம் தந்து அன்றாடக கடமையை செய்யவும் தொழிலை நடத்தவும் பெலப்படுத்தியுள்ளார். தேவாதி தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்.
Mr.Johnson, Coimbatore.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு. என் இதயம் நிறைந்த ஸ்தோத்திரம். 2021 நவம்பர்-டிசம்பர் மாத சத்தியவசன பத்திரிக்கையை என்னுடைய நண்பர் ஒருவருடைய இல்லத்தில் படித்து மகிழ்ந்தேன். ஆழமான கருத்துக்களைக் கண்டேன். நன்றி.
Mr.Vannakalai, Chathirapatti.
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, நான் அநேக வருடங்களாக சத்தியவசன பங்காளராக உள்ளேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் உள்ள தினசரி வேதவாசிப்பு அட்டவணையைத் தவறாமல் பின்பற்றி, அநேக வருடங்களாக ஒழுங்காக வேதாகமத்தை வாசித்து முடித்துள்ளேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியான வேளையில் வந்துவிடுகிறது நன்றி.
Mrs.Chandrabai Paul, Coimbatore.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்த கத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் நாங்கள் விசுவாசப் பாதையில் நிலைத்து நிற்கவும் அவர் சித்தத்தின்படி நடக்கவும், எங்களுக்காக ஜெபிக்க தயவாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Mrs.M.Samuel, Nellikuppam.