வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2013)

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தினமும் காலையில் நாங்கள் இருவருமாக குடும்ப ஜெபத்தில் உபயோகித்து, ஜெபக் குறிப்புகளுக்காக கருத்தாய் ஜெபிக்கிறோம். நன்றி. தொலைகாட்சி நிகழ்ச்சி “சத்தியவசன” நிகழ்ச்சிகளை கூடியமட்டும் தவறாது கேட்டு பயன்பெறுகிறோம்.

Mr.Appadurai, Srivilliputhur.

2. என் மகனுடைய 10ஆம் வகுப்பு தேர்வுக்காக தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். நீங்களும் என் மகனுக்காக அதிகமாக ஜெபித்துள்ளீர்கள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறக் கிருபை செய்தார். அவர் வல்ல நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஜெபித்த உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மிகவும் ஞானத்தில் குறைவான மகனை கர்த்தர் ஆசீர்வதித்தார்.

Mrs.Angelin Jose, Chennai.

3. அன்பு சகோதரி சாந்திபொன்னுவின் தியானக் குறிப்புகள் “அனுதினமும் தேவனுடன்” புத்தகத்தில் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. அவர்களுடைய ஒளிவு, மறைவு இல்லாமல் வெளியரங்கமாக, தைரியமாக கர்த்தருடைய வார்த்தைகளை எடுத்துச்சொல்வது வாழ்க்கைக்கு மிகப் பிரயோஜனமாக இருக்கிறது. கர்த்தர் தாமே அந்த ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Mr.Nelson Ross, Mumbai.

4. We Listen your TV Programs often and get benefited in some areas. Now we would like to be one of the Visuvasa Pankalars. Thanking you.

Mr.N.Abraham Lincoln,Chennai.

5. நான் சத்தியவசன விசுவாசப் பங்காளராக உள்ளேன். தாங்கள் அனுப்பும் பத்திரிக்கைகளையும் தவறாமல் பெற்றுவருகிறோம். தொலைகாட்சி நிகழ்ச்சியை குடும்பமாகப் பார்க்கிறோம். ஊழியங்கள் வளரட்டும். பரமனின் பணியை விரைவாய் செய்துவருகிற சத்தியவசன ஊழியங்கள் இனியும் விரைவாய் நம் பாரத தேசம் எங்கும் பரந்துகிடக்கிற ஜனங்களைத் தேடி கண்டுபிடிக்கட்டும். அனைவரும் இயேசுவே தெய்வம், இயேசுவே இரட்சகர் என முழங்கட்டும். ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.

Mr.K.Yovan, Coimbatore.

6. சத்தியவசனம் அனுதின தியானம் மற்றும் வெளியீடுகளைப் படிக்கிறோம். பயனுள்ளதாக இருக்கிறது. ஜெபக் குறிப்புகளுக்காகவும் ஜெபிக்கிறோம். TV நிகழ்ச்சிகளும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக வாழ்வுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

Mr.D.Thangaiah, Kanchipuram.

7. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் அனுதினமும் முறையாக வேதத்தை வாசிக்கவும் தியானப்பகுதியை வாசித்து வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்ந்து ஆசீர்வதிக்கப்படவும் பிரயோஜனமுள்ளதாக இருப்பதால் நன்றிசெலுத்துகிறேன். ஊழியங்களுக்காகவும், தியானங்களை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mrs.E.Jeyaseeli Edward, Madurai.