(ஜனவரி-பிப்ரவரி 2020)
[01]
திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் 7 மணிக்கு ஒலிபரப்பாகும், சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். டாக்டர் சாம் கமலேசன் பேசினார். தற்போது Prof.Edison பேசிக்கொண்டிருக்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர் அருமை, பாடல்களும் அருமை, சத்தியவசன நிகழ்ச்சிகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.
Mr.J.A.Judson, Salem.
[02]
Praise the Lord, I am mind depression due to family circumstances. But Today (10.8.19) meditation words written by Bro. Vashini Earnest encoura ged me. The Lord has strengthen me, thro’ the words. Thanks be to the Lord.
Sis.Kamala Robert, Coimbatore
[03]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழை, படித்து பயனடைந்து வருகிறேன். ஊழியம் மேன்மேலும் சிறப்புறவும், பன்மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் இறைவனை வேண்டுகிறேன்.
சகோ.தங்கராஜ், கொட்டாரம்.
[04]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு தங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்தும் வாட்ஸ்அப் மூலம் அனைத்து ஜெபக் குறிப்புகளையும் வாசித்து வருகிறேன். என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது. எனது பேரப்பிள்ளைகளுக்காக ஜெபித்து வருகிறீர்கள் தங்களுக்காகவும் ஊழியத்துக்காகவும் அன்றன்று செய்திகளை தயாரித்துக் கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்காகவும் தினந்தோறும் ஜெபித்துவருகிறேன்.
சகோ.ஞானக்கண் செல்வராஜ், மதுரை
[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய பெலனையும், விசுவாசத்தில் வளர்ச்சியையும் கொடுக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
Mr.K.Immanuel Gideon Inbadas, Vellore
[06]
Praise the Lord, I refer your Programme in Nambikkai TV on 22nd September. I have heard your programme in Feba, then now in Nambikkai TV long break. The Message about inferiority complex and God’s Chossing was good, A blessed Message. Please pray for me, and my well being Thanks.
Mr.Mathew
[07]
உங்களுடைய TV நிகழ்ச்சியை பார்த்தேன் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தேன். உங்களுடைய செய்தி (கர்த்தர் கொடுத்த வார்த்தை) என்னைத் தொட்டது, தேற்றியது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரி மெர்லின்தாஸ், நாகர்கோவில்
[08]
அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற இதழை நாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறோம். அதிலுள்ள இறை வார்த்தைகளும், விளக்கங்களும், எங்கள் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. தங்களோடு இணைந்து பணியாற்றும் அத்தனை ஊழியர்களுக்காகவும், பணிகள் மேலும் சிறப்புடன் நடைபெறவும் எங்களது அன்றாட ஜெபத்தில் வேண்டி வருகிறோம்.
Mrs.Janet George, Madurai.