வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 1 வெள்ளி

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக (கொலோசெயர் 3:16)
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங். 18:28).
ஆதியாகமம் 1,2 ; மத்தேயு 1

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக (கொலோசெயர் 3:16)
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங். 18:28).
ஆதியாகமம் 1,2 ; மத்தேயு 1
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமி.33:3).
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:6) புதிய வருஷத்தை காணச்செய்த கர்த்தரைத் துதிப்போம். வருஷத்தின் துவக்கம் முதல் முடிவுமட்டும் தேவனாகிய கர்த்தரின் கண்கள் நம்மேலிருந்து நம்மை வழிநடத்தவும் பாதுகாக்கவும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.
தியானம்: 2021 ஜனவரி 1 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 41:1-14
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். …என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் (ஏசா.41:10).

2021ஆம் ஆண்டிற்குள் பிரவேசித்திருக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். தேவ ஆசீர்வாதமும் பாதுகாப்பும் அவர் அருளும் சுகமும் நிறைவுவாய் உங்கள் குடும்பங்களில் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம்!
மறுபடியும் ஒரு புதிய வருடத்துக்குள் நுழைந்துள்ளோம். நமது வாழ்க்கை என்பது ஒரு பயணம். பிறப்பில் ஆரம்பிக்கின்ற இவ்வாழ்வில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், சம்பவங்கள் வேறுபட்டதாயிருப்பதால், பயணமும் தனித்துவம் வாய்ந்ததாகவே காணப்படுகிறது. அப்படியே பயணப்பாதைகள் வேறு பட்டிருப்பதால் ஒவ்வொருவரின் சிந்தனைகளில் அலைமோதும் எண்ணங்களும் வேறுபட்டவையாகவே இருக்கின்றன. இப்படியான இப்பயணத்தில் எத்தனை வருடங்களை நாம் கடந்து வந்திருந்தாலும், அது யாராயிருந்தாலும், புதிய வருடம் ஒன்றிற்குள் பிரவேசிக்கும்போது, இவ்வருடம் எப்படி அமையுமோ என்ற ஏக்கமும், பயமும் பலரையும் ஆட்கொள்ளத்தான் செய்கிறது. ஆக, நமது வாழ்க்கைப் பயணத்தை ஸ்தம்பிதமடையச் செய்கின்ற பல முக்கிய காரணிகளில் இப்பயமும், கலக்கமும் மிக முக்கிய காரணிகளாக இருப்பதை மறுக்கமுடியாது.
இன்று நம்மை மட்டுமல்ல, ஆதிமுதல் ஒவ்வொரு மனிதனையும் பயமும் ஏக்கமும் ஆட்கொண்டிருந்ததை நாம் காணலாம். இதற்குக் காரணமான கீழ்ப்படியாமை, பாவம், விக்கிரக வழிபாடுகள், அடிமைத்தனங்கள் என்று பல காரியங்கள், தனிமனித வாழ்வை மாத்திரமல்ல, சந்ததிகளையும் பாதித்திருக்கிறதை நாமறிவோம். கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கூட பலவேளைகளிலும் பயத்தோடும், கலக்கத்தோடும் தம் பயணத்தில் ஸ்தம்பித்து நின்றார்கள். ஆனாலும், தேவன் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களது தவறுகளை உணர்த்தி, “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று பலப்படுத்தி, சகாயம் செய்து, அவர்களைத் தாங்கி வழி நடத்தினார். “திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத் தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).
இன்று நம்முடன் இருப்பவரும் அதே தேவன்தான். நமது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு புதிய வருடத்திற்குள் பிரவேசிக்கும் இந்நாளிலும், எத்தகைய பயம் கலக்கம் இருந்தாலும் தேவனை நம்புவோம். அவர் நம்மையும் தமது வார்த்தையால் பலப்படுத்தி, சகாயம் செய்து, தமது நீதியின் வலதுகரத்தினால் தாங்கி நடத்துவார். ஆனால், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து முன்செல்ல நாமேதான் ஆயத்தத்துடன் எச்சரிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில்,
“இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரண பரியந்தம் நம்மை நடத்துவார்” (சங்.48:14).
ஜெபம்: ஜெயம் அருளும் தேவனே, கடந்தகால தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, பயத்தையும் கலக்கத்தையும் நீக்கி, உமது வார்த்தையைப் பற்றிக்கொண்டு இப்புதிய வருடத்தைக் கடந்து செல்ல கிருபை தாரும். ஆமென்.
இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான் (1சாமுவேல் 29:10).
ஆண்டவருக்கு பயந்து பக்தியும் நீதியுமாய் வாழும்பொழுது, நாம் செல்லும் பாதை எதுவாயிருந்தாலும் தேவன் நம்மை நடத்துவார் என்ற உறுதி நமக்கு உண்டு. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் (சங்கீதம் 37:23).
சவுல் அரசன் தனது மதியீனத்தால் தன்னையும் தனது நாட்டையும் அழிவுக்கு நேராக நடத்திச் செல்வதை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனர். பெத்லெகேமியனான தாவீதின் மீது அவன் கொண்டிருந்த பகையுணர்வும் வெறுப்பும் தாவீதை அவனுடைய சொந்த நாட்டை விட்டு அலையவைத்தது. பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம் பண்ணி களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்பதை அறிந்த தாவீது அப்பட்டணத்தை மீட்பதற்கு விரைந்தான். பெலிஸ்தர்களை விரட்டி அக்குடிகளை இரட்சித்தான். அப்பட்டணத்தைத் தன்னுடைய தலைமையிடமாக சில காலம்; அவர் வைத்திருந்தார் (1 சாமு. 23:1-6).
ஆனால் தாவீது தங்கியிருக்கும் இடத்தை அறிந்து அவனை சவுல் துரத்துவது வழக்கமாயிருந்தபடியால் தாவீது அங்கிருந்தும் தப்பியோட வேண்டியதாயிற்று (1சாமு.23:7-14). இந்த நிலையற்று அலையும் காலங்களிலும் தாவீது அறுநூறு பேரை தன் பக்கமாய் இழுத்திருந்தான். ஆனாலும் அந்த காலங்கள் அவனுக்கு வருத்தமும் துன்பமும் நிறைந்த நாட்களாகவே அமைந்திருந்தன. இறுதியில் அவன் தன் நாட்டை விட்டு பழைய எதிரியான பெலிஸ்தர்களிடம் அடைக்கலமாக வேண்டியதாயிருந்தது.
தாவீது கோலியாத்தை கொன்றான் என்று எதிரிகள் நினைவில் வைத்திருந்தாலும் தற்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவுக்கு எதிரி என்பதால் தாவீதோடும் அவன் மனிதர்களுடனும் பெலிஸ்தியர் விருப்பமற்ற ஓர் உடன்பாடு செய்து கொண்டனர். தாவீது காத் தேசத்து அரசரின் அனுமதியுடன் சிக்லாக்கை ஓராண்டுக்கும் மேலாக தன்னுடைய தலைமையிடமாகக் கொண்டிருந்தான் (1சாமுவேல் 27:1-7). சூர் வனாந்தரத்தின் தென்பகுதியில் குடியிருந்த கோத்திரங்களைப் படையெடுத்து கொள்ளையடித்து பெலிஸ்திய அரசனுக்கு உதவியாக இருந்ததால் (1சாமு.27:8-12) ஆகீஸ் அரசனின் நட்பையும் நன்மதிப்பையும் தாவீது பெற்றுக்கொண்டான். இஸ்ரவேலரைத் தவிர மீதி மக்களின் மீது படையெடுத்துச் செல்லும் வரையிலும் காரியங்கள் நன்கு நடந்தேறின. ஆனால் அந்த சூழ்நிலையும் மாறியது.
பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூட்டினார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். தாவீதுக்கு இது ஓர் இக்கட்டான நிலை; தன்னுடைய சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமான பெலிஸ்தியரின் படையைச் சார்ந்திருந்தான். அவன் என்ன செய்வான்? தேவன் இந்த சிக்கலான நிலையிலிருந்து எவ்வாறு அவனை விடுவிப்பார்?
தாவீது இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அதிக நேரம் காத்திருக்கவில்லை. தன்னுடைய மக்களுக்கு எதிராக தாவீது எவ்வாறு யுத்தம் செய்வான் என்று பெலிஸ்தருடைய பிரபுக்கள் சந்தேகப்பட்டார்கள். பெலிஸ்தரைக் கொன்று மீண்டுமாக சவுல் அரசரின் நம்பிக்கையைப் பெறுவதே சிறந்த வழியாகும். எனவே ஆகீஸ், இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ (1 சாமுவேல் 29:10) என்று தாவீதுக்குக் கட்டளையிட்டான். பெலிஸ்தரின் சந்தேகத்தினால் தன்னுடைய சொந்த ஜனத்துக்கு எதிராக யுத்தம் செய்வதிலிருந்து தாவீதை தேவன் தடுத்துவிட்டார்.
சூடானில் உள்நாட்டு அருட்பணியின் நிறுவனரான ரோலண் வி.பிங்ஹாம் ஒருமுறை ஒரு வாகன விபத்தில் பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மறுநாள் வரை அவர் தனது சுயநினைவைப் பெறவில்லை. நினைவு திரும்பியதும் “நான் இங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?” என்று அங்கிருந்த மருத்துவ தாதியை வினாவினார். “நீங்கள் இப்பொழுது பேசக்கூடாது; ஓய்வெடுங்கள். ஒரு விபத்தில் நீங்கள் சிக்கியிருந்தீர்கள்” என அப்பெண்மணி கூறினார். “விபத்தா? விபத்தா?” என பிங்ஹாம் ஆச்சரியத்துடன் கேட்டார். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்விலே விபத்து என்பது கிடையாது. தேவனுடைய பூரண வழிநடத்துதலின் ஒரு நிகழ்வு ஆகும் என்று கூறினார். தேவனுடைய வழி நடத்துதலில் நம்முடைய கண்ணோட்டமும் அவ்வாறே இருக்கவேண்டும். தேவனுக்கு முன்பாக பாவமில்லாத ஓர் உத்தம வாழ்வு வாழும்பொழுது நம் வாழ்விலும் விபத்துகள் நடைபெறாது; அவையாவும் அவருடைய பூரண வழி நடத்துதலின் நிகழ்வேயாகும். தேவன் உங்களை வழிநடத்த உங்களை இன்றே ஒப்புவியுங்கள்.
தேவன் தம் பிள்ளைகளை அடர்ந்த இனிமையான புல்வெளியில் நடத்துகிறார்;
களைத்திருக்கும் அவர்கள் பாதத்தை குளிர்ந்த நீரால் குளிரப்பண்ணுகிறார்;
தண்ணீரிலும் வெள்ளத்திலும் அக்கினியிலும் நடத்தினாலும்;
அனைவரையும் தம் தூய இரத்தத்தால் கழுவி பாதுகாக்கிறார்;
பெருந்துன்பத்தின் நடுவிலும் தேவன் தரும் பாடல் நாள் முழுதும் தொடரும்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
[01]
மார்ச் -ஏப்ரல் 2020 மாத சத்தியவசன சஞ்சிகையை 3 முறை படித்தேன். ஒவ்வொரு தலைப்பிலான செய்திகளையும் படித்து ஆறுதலடைந்தேன். சகோதரி சந்திரா அருமைராஜ் அவர்கள் எழுதியிருந்த மீட்பர் இயேசு உயிர்த்தார் என்ற கவிதை மிகவும் அருமை. தங்களை தேவன் இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த வேண்டுகிறேன்.
Mrs.Sundariammal, Madurai.
[02]
Dear Brother in Christ, I need your Monthly Daily reading book and Sathiya vasanam Magazine. Daily reading devotions are super and very useful.
Mrs.Daisy Jeyapandiaraj, Vellore.
[03]
தங்களது பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. வாசித்தேன். சத்தியவசன பத்திரிக்கை உண்மையிலேயே ஜீவனுள்ள தேவனண்டைக்கு என்னை வழி நடத்துகிறது.
Mrs.Mary Jebaraj, Madurai.
[04]
அன்புள்ள சத்தியவசன குடும்பத்துக்கு, என் அன்பின் வாழ்த்துக்கள். இவ்வாண்டில் கடினமான பேரழிவின் மத்தியிலும் நம்மை காத்து வழிநடத்தும் தேவனுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. முதிர்வயதிலும் தாங்குவேன், சுமப்பேன் என்று வாக்குத் தந்த தேவன் என் வாழ்விலும் அப்படியே செய்துவருகிறார். நவம்பர் மாதம் 82 வயதை காண தேவன் கிருபை செய்தார். 91 ஆம் சங்கீதத்தில் சொல்லப்பட்ட வாக்குகள் யாவையும் நான் அனுபவித்து வருகிறேன். கர்த்தருக்கே மகிமை!
Mr.Richard Sam Alex, Chennai.
[05]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. சத்தியவசன ஊழியங்களுக்காக, அனைத்து ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். பத்திரிக்கைகள் ஆசீர்வாதமாக உள்ளன. வாசித்து பயன்பெறுகிறேன். கர்த்தர் ஊழியங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
Sis.Gunaselvi Malliga, Udumalpet.
[06]
தங்களின் இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற ஏடு மறைக் கல்வி நடத்தவும், பெண்கள் பணிக்குழு, குறிப்பாக அன்பின் ஐக்கியக் கூடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சத்தியவசனம் என்ற ஏடு வாலிப இயக்கம், பேரவை மூப்பர்கள் மற்றும் இருபால் பெரியவர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிய தூண்டுதலாக இருக்கிறது.
Mr.S.Thangaraj, Chennai.
[07]
தாங்கள் எனக்கு அனுப்பிய நவம்பர் – டிசம்பர் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை கூடுமானால் மற்றொரு பிரதி அனுப்ப வேண்டுகிறேன். அதில் வெளியிடும் செய்திகள் நன்றாக மிகவும் பிரயோஜனமாக இருப்பதால் என் மகளுக்கு அனுப்பிவிட்டேன். கர்த்தர் ஊழியத்தை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
Mr.A.David Jeyachandran, Madurai.
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
உன்னதமான தேவனின் ஈடு இணையற்ற நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கர்த்தருடைய பெரிய கிருபையினாலே மற்றுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக பிரவேசிக்க தேவன் உதவி செய்துள்ளார். நம்மை தமது உள்ளங்கையில் செதுக்கி வைத்துள்ள தேவன் இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் அவருடைய திருவுளச் சித்தத்தின்படியும் தம்முடைய உண்மையுள்ள வாக்குகளின்படியும் நம்மை ஆசீர்வாதமாய் நடத்துவார். நமது அனுதின வாழ்க்கைக்குரிய சகல காரியங்களிலும் கர்த்தர் நம்மோடிருப்பார். ஆகவே, தம்முடைய ஐசுவரியத்தின்படியே நம்முடைய குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குகிற சர்வவல்ல தேவன்மேல் நம்பிக்கை வைத்து தைரியமாய் முன்னேறுவோம்.
2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். ஃபீபா வானொலியில் ஒலிபரப்பாகி வந்த சத்தியவசன நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதத்திலிருந்து நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாற்று ஏற்பாடுகளை ஜெபத்தோடு முயற்சித்து வருகிறோம். டிசம்பர் 7ஆம் தேதி Zoom செயலியின் வாயிலாக நடைபெற்ற Back To The Bible கிறிஸ்துமஸ் கீத ஆராதனையில் அநேக விசுவாச பங்காளர்கள் பங்கெடுத்தீர்கள். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.
ஜனவரி மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் புத்தாண்டுக்குள் பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரும் பிரயோஜனமடையும்படியாக தியானங்களை எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
