வேதாகமப் புத்தகங்களை எழுதியவர்கள் இன்று எழுதுவார்களானால் கீழ்க் கண்ட நவீன கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள்:
WORD PROCESSOR
IBM SELECTRIC II தட்டச்சுஇயந்திரம்
AN ELECTRIC SMITH CORONA
AN OLD MANUAL OLYMPIC
இவை புத்தகங்களை எழுதவும், அச்சிடவும் பயன்படும் புதிய கருவிகள்.
காலங்கள் மாறுகின்றன. பொருட்களும் மாறுகின்றன, வேதாகமம் எதில் எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல, தேவனுடைய ஆவியானவர் தங்களுக்குக் கிடைத்த எதன் மேலும் எழுதுங்கள் என்று எழுத்தாளர்களுக்கு கட்டளையிட்டார். எவ்வளவு தாழ்மை பாருங்கள்!
அநேக பொருட்களின்மேல் வேதாகமம் எழுதப்பட்டது.
வேதாகமம் மிகப்பழைய காலத்தில் எழுதப்பட்டதால் அக்காலத்தில் நடை முறையில் எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின்மேல் கர்த்தருடைய வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1.களிமண்:
களிமண்ணில் கூரை ஓடுகள் செய்யப்பட்டு, அவற்றில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருப்பதை இன்று காண்கிறோம். பண்டைய காலத்தில் சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியது களிமண். களிமண்ணால் தகடுகள் செய்யப்பட்டு, அதில் STYLUS என்னும் முக்கோண வடிவ எழுதும் கருவியால் எழுத்துக்கள் எழுதப்பட்டன. அவை உலர்ந்தபின் செங்கல் சூளையில் வைத்து சுடப்படுவதுபோல், இந்தத் தகடுகள் சுடப்பட்டு உறுதி செய்யப்படும்.
எசேக்கியேல் 4:1 இல் மனுபுத்திரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உன் முன்வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, என்று உள்ளது. ஆங்கில வேதாகமத்தில் மண் ஓடு என்று உள்ளது. இதுதான் களிமண் தகடு. இப்படிக் களிமண் தகட்டில் எருசலேம் நகரத்தை வரைந்து காட்டுவதன் மூலம் தேவன் எரேமியாவுக்கு எருசலேம் நகரம் பாபிலோனுக்கு அடிமைப்பட்டுப் போகும் என்று உணர்த்த விரும்பினார்.
வேதாகமம் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்படி அக்காலத்தில் எழுதப்பட்ட களிமண் ஓடுகள் பலவற்றை தங்கள் ஆராய்ச்சியின்போது கண்டெடுத்துள்ளார்கள், அவற்றில் சித்திர எழுத்துகளும், குறியீடுகளும் உள்ளன.
2.கல்
பத்துக்கற்பனைகளை எழுதக் கற்பலகைள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிக்கிறதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார் (யாத். 24:12)
சீனாய்மலையில் கர்த்தர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் (யாத்.31:18).
தேவனிடத்தில் பெற்ற கற்பனைப் பலகைகளைச் சுமந்துகொண்டு மோசே இறங்கிவரும்போது, கீழே இஸ்ரவேல் புத்திரர் பொன் கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கி, ஆடிப்பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு, கோபங்கொண்டு, தன் கையில் இருந்த இரண்டு கற்பலகைகளையும் கீழே போட்டு உடைத்துவிட்டான். அப்பொழுது தேவன் மோசேயிடம் வேறு இரண்டு கற்பலகைகளைச் செய்து கொண்டு தம்மிடம் ஏறிவரச் சொன்னார்.
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன் (யாத்34:1) என்றார்.
பின்னால் யோசுவாவின் காலத்தில் கர்த்தருடைய கற்பனைகள் வேறு கற்களில் எழுதப்பட்டன. தேவனுக்குத் தகன பலிகளைச் செலுத்தும்படி யோசுவா ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான் (யோசு.8:32). அகழ்வாராய்ச்சியில் எகிப்தில் கல் தூண்களிலும், கல் பலகைகளிலும் எழுதப்பட்ட பல எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3.பாப்பிரஸ்
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன் (2 யோவான் 12). இங்கே காகிதம் என்று யோவான் குறிப்பிடுவது பாப்பிரஸ் என்று அறியப்படுகிறது.
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகள் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன் (வெளி.5:1). இந்தப் புத்தகம் பாப்பிரஸினால் செய்யப்பட்டது.
VELLUM – கன்றுக்குட்டியின் தோல்
PARCHMENT – ஆட்டுக்குட்டியின் தோல்
LEATHER – பசுவின் தோல்
2 தீமோ.4:13இல் இவற்றில் இரண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
புஸ்தகங்கள் அல்லது சுருள்கள் எனப்படுவது நீண்ட, பரப்பான பொருட்கள். அவற்றின்மீது செய்திகள் எழுதப்பட்டிருக்கும். மிருகங்களின் தோல்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நீண்ட சுருளாகச் செய்யப்பட்டு அவற்றில் செய்திகள் எழுதி, சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.
பாப்பிரஸ் என்பது தண்ணீரில் வளரும் ஒரு செடி. இது 15 அடிவரை வளரும். இதன் உச்சியில் மிருதுவான பூக்கள் காணப்படும். இதன் தண்டு முக்கோண வடிவமானது. இதன் உட்பகுதியில் (Pith) சோறு, மிருதுவாக இருக்கும். இதுதான் எடுக்கப்பட்டு பேப்பர் செய்யப்படும். ஆரம்பத்தில் நீள அகலமான தகடுகள் போலச் செய்யப்பட்டு, பலப்படுத்தும்படியாக அதன் மேல் பிசின் பூசிக் காயவைப்பார்கள். பின்னர் பேனாவில் மை தொட்டு அதில் எழுதுவார்கள்.இக்காலத்தில் காகிதம் செய்வதற்கு வேறெந்தப் பொருளையும்விடப் பாப்பிரஸ்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
4.உலோகம்
பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக (யாத்.28:36) இதை இஸ்ரவேலரிடம் கூறும்படி தேவன் மோசேயிடம் கட்டளையிட்டார்.
யோபு பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்வாறு கூறினான்: ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதித்தால் நலமாயிருக்கும் (யோபு 19:23,24).
வேதாகம எழுத்தாளர்கள் பொன்னை மாத்திரம் உபயோகிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த சாதாரணப் பொருட்களிலும் எழுதினார்கள்.